Infinite Entertainment, Zero Cost: Get Your Free Books, Music, and Videos Today!

தினசரி ராசி பலன்‼️ ஜோதிட பயன்பாடு‼️ ஜாதக விவரங்கள்‼️

Description
உங்கள் ஜோதிடம் மற்றும் ஜாதகத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம் மற்றும் குறைந்தபட்சம் 70 சதவிகித சரியான முடிவுகளைப் பெறலாம் மேலும் உங்கள் வாழ்க்கை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: +916379935727.நன்றி
Astro Suresh
We recommend to visit

No.1 Tamil News Daily

Last updated 3 days, 23 hours ago

🔥 முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த சேனலில் இணையவும்.

சந்தேகம் சாமிக்கண்ணு!

@TheekkathirLive

For Best Tamil Groups : @best_tamil_groups

🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

Last updated 8 months, 2 weeks ago

🦋✨ தமிழ் கவிதை 🦋✨

We do not own any conted posted. Dm for removal.
@hokomartadmin

❤️For Best Tamil Groups :
👇👇👇👇

@TamilBestGroups

❤️ 🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 😍😍

Last updated 1 year, 6 months ago

2 years, 1 month ago

LISTEN TO THIS VIDEO

YOU CAN ABLE TO GET AN CHANGE IN YOUR LIFE

IT HAPPENS ONLY 1 TIME OVER A 700 YEARS

12/MARCH/2022
10:30 AM TO 12:00 PM
MORNING TO AFTERNOON

THERE IS 01:30 MIN TO CHANGE YOUR LIFE BY YOUR WISES , IT HAPPENS ONLY ONCE IN 700 YEARS

BEST WAY TO MAKE OUR WISES FROM YOUR GOD🌟

2 years, 1 month ago
2 years, 4 months ago

அதன் பிறகு நவம்பர் 21 ஆம் தேதி இவர்களுடன், ஆன்மீக நிலைக்கு எதிர்க் கிரகமான சுக்கிரன் இணைந்து இந்த மூவரின் தனித்தன்மையை இழக்க வைப்பார். அதனையடுத்த சில நாட்களில் மார்கழி 1 ஆம் தேதி சூரியனும் இவர்களுடன் இணைந்து அனைவரையும் அஸ்தங்கப்படுத்தி, வலிமை இழக்கச் செய்து இந்த குரு, சனி, கேது சேர்க்கையினை முழுக்க ஸ்தம்பிக்கச் செய்வார்.

ஆகவே மேம்போக்காக சில வாரங்கள் இந்த இணைவு இருப்பதாக தோன்றினாலும், இந்த இணைவின் உன்னத நோக்கம் நவம்பர் 5 முதல் நவம்பர் 20 வரை மட்டுமே இருக்கும். இந்த இரண்டு வாரங்களில் பிறக்கும் ஒரு குழந்தை உலகில் ஏதோ ஒரு மூலையில் ஆன்மீக உயர்நிலையை கண்டிப்பாக அடையும்.

அது நான் மேலே சொன்னதைப் போல பகவான் கிருஷ்ணர், நபிகள் நாயகம், இயேசுபிரான் போன்ற அவதார புருஷர்களாக இருக்கலாம்.

2 years, 4 months ago

அதன்படி ஆன்மீக வாழ்வில் ஒருவர் சிறப்படைய வேண்டும் என்றால், இல்லற வாழ்க்கைச் சுகங்களில் ஆர்வத்தைத் தரக் கூடியவனும், காமம் பெண்சுகம், உல்லாசம், சொகுசுவாழ்க்கை போன்றவைகளுக்கு அதிபதியுமான சுக்கிரன் அந்த ஜாதகத்தில் பலவீனம் அடைந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் அந்த ஜாதகர் வேறுவகையான சிந்தனைகள் இன்றி, பரம்பொருளிடம் பரிபூரண சரணாகதி அடைந்து தெய்வத்தின் அருளை முழுமையாகப் பெறுவார்.

(1-10-2013 சக்திவிகடன் இதழ் இணைப்பு சக்திஜோதிடத்தில் வெளிவந்தது )

பின் இணைப்பு...,

நவம்பரில் நடக்கும் வெகு அபூர்வமான குரு, சனி, கேது சேர்க்கை.

ஸ்ரீ கிருஷ்ணர், புத்தர், நபிகள், இயேசு போன்ற அவதாரங்கள் பிறக்கக் காரணமான கிரக சேர்க்கை.

நல்ல ஆன்மீக நிகழ்வுகளுக்கும், உயர் ஆன்மீக சிந்தனைகளுக்கும் காரணமான குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் உன்னத இணைவு வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி அன்று நடக்க இருக்கிறது.

தற்போது விருச்சிக ராசியில் குரு இருக்கிறார். அதனையடுத்த தனுசு ராசியில் சனி, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்திருக்கின்றன. வரும் குருப் பெயர்ச்சி நாளான 5-11-2019 அதிகாலை குரு கிரகம் தற்போதைய விருச்சிக ராசியில் இருந்து பெயர்ச்சியாகி, தனுசுக்குள் நுழைந்து ஏற்கனவே அங்கிருக்கும் சனி, கேது ஆகியோருடன் இணைவார்.

இந்தச் சேர்க்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வரை நீடிக்கும். அன்றைய நாளில் சனிப்பெயர்ச்சி நடப்பதால், இந்த மூன்று கிரகங்களின் சில வார இணைப்பிலிருந்து சனி விலகி, மகர ராசிக்குச் செல்வார். ஆக இந்த ஆண்டு நவம்பர் 5 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 24 வரை, சில வாரங்களுக்கு குரு, சனி, கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை இருக்கும்.

இந்த இணைவின் சிறப்பம்சமாக மேலும் சிலவற்றைச் சொல்லலாம். வெகு காலத்திற்கு பிறகு மிகவும் அபூர்வமாக இந்த இணைவு தனுசு ராசியில் நடக்கிறது. இந்த மூன்று கிரகங்களின் இணைவு ஆன்மீக உயர்நிலையையும். ஆன்மீக உன்னதத்தையும் குறிக்கும் என்றாலும், 12 ராசிகளிலும் இறைவழிபாட்டையும், ஆன்மீகத்தையும், நல்ல தன்மை, மற்றும் ஒழுக்கத்தையும் குறிக்கும் தனுசு ராசியில் இந்தச் சேர்க்கை நடப்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஆன்மீகத்திற்கு முழுமுதல் காரணமான மூன்று கிரகங்களின் உன்னத கூட்டுச் சேர்க்கை, ஒரு முழுமையான ஆன்மீக ராசியில் நடக்கிறது. இந்த நிகழ்வு மிகவும் அபூர்வமானது. இந்த அபூர்வமான ஆன்மிக கிரகங்களின் இணைவு நடக்கும் சில வாரங்களில் பிறக்கும் குழந்தைகள், அவற்றின் லக்ன மற்றும் ராசி அமைப்பிற்கேற்ப ஆன்மிகத்தில் மிகவும் உயர்நிலையை அடையும்.

குறிப்பாக இந்தச் சேர்க்கை நடக்கும் தனுசு ராசியினை லக்னம் அல்லது ராசியாகவோ அல்லது இவற்றின் ஐந்து, ஒன்பதாம் இடங்களான மேஷம், சிம்மம், போன்றவற்றை லக்னம் அல்லது ராசியாகவோ கொண்டு பிறக்கும் குழந்தைகள், அல்லது சனி, குரு தொடர்பு கொண்ட லக்னம், ராசிகளில் பிறக்கும் குழந்தைகள் மிகப்பெரிய ஞான அமைப்பினை கொண்டு பிறக்கும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த இணைவு நடக்கும் சில வாரங்களுக்குள் பிறக்கும் ஏதேனும் ஒரு குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர், புத்தர், நபிகள் நாயகம், ஏசு, ஸ்ரீராகவேந்திரர், பகவான் ரமணமகரிஷி, சீரடிபாபா, காஞ்சி மகாபெரியவர் போன்ற அதி உன்னத ஞானிகளாகவோ, மிகப்பெரிய ஜகத்குருவாகவோ ஆவார்கள்.

ஜோதிடம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதால் இந்த ஆன்மீக கிரகங்களின் இணைவினால் இந்து மத ஜகத்குருக்கள்தான் அவதரிப்பார்கள் என்பதில்லை. பிற மதங்களான இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மார்க்கங்களையும் தோற்றுவித்த, வளர்த்தெடுத்த மகான்கள் போன்றவர்கள் அந்தந்த மதங்களில் அவதரிப்பார்கள்.

எந்த ஒரு முழுமையான பலனும் வானில் கிரகங்கள் இணையும் தூரத்தைப் பொறுத்தது. அதாவது சம்பந்தப்பட்ட கிரகங்கள் எத்தனை டிகிரியில் வானில் இணைகின்றன என்பதை உள்ளடக்கியது. கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று எட்டு டிகிரிக்குள் இணைந்தால் அது ஒரு பூரண இணைவு. 13 டிகிரி இடைவெளியில் இணைந்தால், அது சம்பந்தப்பட்ட கிரகங்களின் சுய இயல்பை இழக்க வைக்காமல் சேரும் ஒரு நிகழ்வு, 22 டிகிரிக்கு மேல் கிரகச் சேர்க்கை இருக்குமானால் அங்கே சேர்க்கை சரியான பலனைத் தராது என்பது ஜோதிட விதி.

அதேபோல ஒரு செயலைத் தரும் முக்கூட்டு கிரகங்களின் அமைப்பில், மற்றொரு எதிர்நிலை கிரகம் இணையுமானால், அனைத்துக் கிரகங்களின் செயலும் பங்கமடையும் என்பதும் இன்னொரு விதி.

அதன்படி குரு, தனுசு ராசிக்குள் நுழையும் நாளில் சனி வெகுதூரம் இருக்கிறார். கேது 15 டிகிரி அமைப்பில் இருக்கிறார். எனவே இந்த அமைப்பு சில வாரங்களுக்கு நீடித்தாலும், தற்போதைய வெகு அபூர்வமான குரு, சனி, கேதுவின் உண்மையான சேர்க்கை நிலை நவம்பர் ஐந்து முதல் நவம்பர் 20 வரை 15 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.

2 years, 4 months ago

ஒருவருக்கு ஆன்மீக ஈடுபாடோ அல்லது தெய்வ கடாட்சமோ பூரணமாக அமைவதற்கு, அவருடைய ஜாதகத்தில் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்களும், குரு, சனி, கேது ஆகிய கிரகங்களும் சுபத்துவம் மற்றும் சூட்சும வலுப் பெற்றிருக்க வேண்டும் என வேதஜோதிடம் சொல்லுகிறது.

ஒரு ஜாதகத்தில் ஐந்தாமிடம் என்று சொல்லப்படுவது பூர்வபுண்ணிய ஸ்தானம் எனவும், ஒன்பதாமிடம் எனப்படுவது பாக்கியஸ்தானம் அல்லது தர்மஸ்தானம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஒருவரின் சிந்தனை, செயல், நடத்தை, அதிர்ஷ்டம் மற்றும் சென்ற பிறவியில் அவர் செய்த பாவ, புண்ணியம் போன்றவற்றை ஐந்தாம் பாவகமும், அவரது ஆன்மீக ஈடுபாடு, ஒழுக்கம், செய்யப் போகும் நற்காரியம், பெறப்போகும் பாக்கியங்கள், ஆலயப் பணிகள், அவரின் முன்னோர்களின் நற்செயல்கள் போன்றவற்றை ஒன்பதாம் பாவகமும் குறிக்கின்றன. பெண்களுக்கு கற்பு, ஒழுக்கம் போன்றவற்றையும் இந்த ஐந்தாம் பாவகமே சுட்டிக் காட்டும்.

இப்படிப்பட்ட நல்ல தன்மைகளைக் கொண்ட ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்கள் இயற்கைச் சுபக் கிரகங்களின் வீடுகளாகி, அந்த பாவகங்களில் நல்ல கிரகங்கள் அமர்ந்து அல்லது சுபக் கிரகங்களின் பார்வை கிடைத்து பலம் பெறுமாயின் அந்த ஜாதகர் இந்த பூமியில் பரம்பொருளின் கருணையைப் பெற்றவராக இருப்பார் என்பது வேதஜோதிட விதி.

இயற்கைச் சுபக்கிரகமான குரு ஒருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்று லக்னத்தையோ, ராசியையோ, மேலே குறிப்பிட்ட ஐந்து, ஒன்பதாம் பாவகங்களையோ பார்வையிட்டால், அந்த நபர் நேர்மையான குணங்கள் மற்றும் ஆன்மீக ஈடுபாடு கொண்டவராகவும், பெரியோர்களால் பாராட்டப் படுபவராகவும், ஆலயத் திருப்பணிகள் செய்யக் கூடிய வாய்ப்பைப் பெற்றவராகவும் இருப்பார்.

மேலும் குரு, ஞானிகளிடம் நெருக்கமாக இருந்து அவர்களுக்கு பணிவிடை செய்வதையும், மதிப்பு வாய்ந்த பெரியோர்களின் அறிமுகம் கிடைப்பதையும் குறிக்கும் கிரகம் ஆவார்.

ஒருவருடைய ஜாதகத்தில் குரு நல்ல ஆதிபத்தியம் பெற்று வலிமையோடு இருக்கும் நிலையில் அந்த ஜாதகருக்கு நேர்மையான வழிகளில் எல்லாவிதமான பாக்கியங்களையும் தருவார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

முதன்மைச் சுபரான குருவைப் போலவே, பாபக் கிரகமான சனியும் ஆன்மீக உணர்வுகளுக்கு காரணமான கிரகம்தான். வேதாந்த அறிவு, பிரம்மத்தை அறிதல் போன்றவைகளுக்கு குரு காரணமாவதைப் போல அமானுஷ்ய சக்திகள், சித்து வேலைகள், யட்சிணி உபாசனை, மாந்த்ரீகம், கிராம தேவதைகளை வணங்குதல், அருள்வாக்கு மற்றும் குறி சொல்லுதல் போன்றவைகளுக்கு சனி காரணம் ஆவார்.

சனி ஒருவருடைய ஜாதகத்தில் சுப பலமோ அல்லது சூட்சுமவலுவோ பெற்று ஐந்து ஒன்பதாம் இடங்களைப் பார்க்காமல், வேறுவகையில் தொடர்பு கொள்ளும் நிலையில் மேலே நான் சொன்ன பலன்களைச் செய்வார்.

மேலும் கூடு விட்டுக் கூடு பாய்தல், குண்டலினி சக்தி போன்றவைகளிலும், சில வகையான முடிவற்ற ஆன்மீகத் தேடல்களிலும் ஆர்வத்தைத் தருபவரும் சனிதான். குறிப்பாக, இறப்பிற்குப் பின் மனிதனின் நிலை என்ன? என்பது போன்ற சிந்தனைகளுக்கு சுப பலம் அல்லது சூட்சுமவலு பெற்ற சனி காரணமாக அமைவார்.

சனி தனது நட்பு வீடுகளான ரிஷபம் அல்லது கன்னியில் தனித்தோ, குரு அல்லது கேதுவுடன் இணைந்தோ அல்லது குருவின் திரிகோணப் பார்வையில் இருப்பது இது போன்ற அமைப்பைக் குறிக்கும்.

அடுத்து ஆன்மீக அறிவையும், பரம்பொருளிடம் தன்னை முழுக்க அர்ப்பணிக்கும் உணர்வையும், பிரம்ம ஞானத்தையும் தரும் கிரகம் கேது. பெரும்பாலான ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகான்கள், மதகுருக்கள் போன்ற ஆன்மீகத் திருவுருக்கள் இவரது அஸ்வினி, மகம் மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களே.

கேது சுபபலம் பெற்று கன்னி அல்லது கும்பம் போன்ற ராசிகளில் இருந்தாலோ அல்லது சுபரான குரு மற்றும் சனியுடன் குறிப்பிட்ட சில டிகிரி இடைவெளியில் இணைந்திருந்தாலோ அபரிமிதமான ஆன்மீக ஈடுபாட்டைத் தருவார்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகளில் கேது இருக்கும் பாவகம் ஐந்து ஒன்பதாமிடங்களாக இருப்பது, அல்லது இரண்டு, பனிரெண்டாம் இடங்களை கேது தொடர்பு கொள்வது ஜாதகரை ஆன்மீகத்தில் மிகப்பெரிய உச்சநிலைகளுக்குக் கொண்டு செல்லும்.

கேது ஒருவர் மட்டும் ஜாதகத்தில் பரிபூரண சுப நிலையில் இருந்தாலே அந்த ஜாதகரை “மனித உருவில் நடமாடும் தெய்வம்” என்று பிறர் போற்றக்கூடிய புனிதராக, பகவானாக மாற்றுவார். முழுமையான ஆத்மஞானத்தை தருவார். பிரம்மத்திற்கு அருகில் செல்ல வைப்பார். எல்லாம் தெரிந்து தெளிய வைப்பார். முற்றும் துறக்கும் பற்றற்ற நிலையை உருவாக்குவார். அனைத்தும் அறிந்தும் அடக்கமாக இருக்க வைப்பார்.

இன்னொரு அமைப்பையும் தெரிந்து கொள்ளுங்கள்...

“நாம் ஒரு நிலையில் உயர்வடைய வேண்டும் எனில் அதன் எதிர்நிலை தாழ்வடைய வேண்டும்” என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒரு சூட்சுமம்.

2 years, 6 months ago

வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த துணிகளை வாங்கி மகிழ்வீர்கள். காதில் அணியும் ஆபரணங்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சுறுசுறுப்பான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : தடைகளை அறிவீர்கள்.

அனுஷம் : முன்னேற்றமான நாள்.

கேட்டை : பிரச்சனைகள் நீங்கும்.
---------------------------------------

தனுசு
அக்டோபர் 03, 2021

தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உருவாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.

பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------

மகரம்
அக்டோபர் 03, 2021

உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். கலை சார்ந்த துறைகளில் இழுபறியான சூழல் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திராடம் : பொறுமை வேண்டும்.

திருவோணம் : குழப்பங்கள் உண்டாகும்.

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------

கும்பம்
அக்டோபர் 03, 2021

மருத்துவ பொருட்கள் தொடர்பான விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், சாதகமான சூழ்நிலைகளும் உருவாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அவிட்டம் : லாபங்கள் உண்டாகும்.

சதயம் : தடைகள் குறையும்.

பூரட்டாதி : சாதகமான நாள்.
---------------------------------------

மீனம்
அக்டோபர் 03, 2021

இழுபறியாக இருந்துவந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சஞ்சலமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.

உத்திரட்டாதி : அதிர்ஷ்டகரமான நாள்.

ரேவதி : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------

2 years, 6 months ago

இன்றைய (03-10-2021) ராசி பலன்கள்

மேஷம்
அக்டோபர் 03, 2021

கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆதாயம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

அஸ்வினி : லாபம் உண்டாகும்.

பரணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை : ஆதரவான நாள்.
---------------------------------------

ரிஷபம்
அக்டோபர் 03, 2021

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் விரயங்கள் ஏற்பட்டாலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சுகங்கள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : உற்சாகமான நாள்.

ரோகிணி : பொறுமையை கையாளவும்.

மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

மிதுனம்
அக்டோபர் 03, 2021

உடன்பிறந்தவர்களின் வழியில் சாதகமான சூழல் ஏற்படும். சங்கீதம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். வழக்குகள் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி தரும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

திருவாதிரை : வரவுகள் மேம்படும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------

கடகம்
அக்டோபர் 03, 2021

தனவரவுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எண்ணிய காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

புனர்பூசம் : இலக்குகள் பிறக்கும்.

பூசம் : அனுகூலமான நாள்.

ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------

சிம்மம்
அக்டோபர் 03, 2021

இருப்பிடம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட்டால் லாபங்கள் மேம்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். காலதாமதமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

மகம் : பிரச்சனைகள் குறையும்.

பூரம் : மாற்றமான நாள்.

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------

கன்னி
அக்டோபர் 03, 2021

பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். முதலீடுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

உத்திரம் : முன்னேற்றமான நாள்.

அஸ்தம் : தெளிவுகள் பிறக்கும்.

சித்திரை : நெருக்கடியான நாள்.
---------------------------------------

துலாம்
அக்டோபர் 03, 2021

பாசனம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்களை முன்னின்று நடத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். புத்துணர்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : தடைகள் நீங்கும்.

சுவாதி : உதவிகள் சாதகமாகும்.

விசாகம் : அபிவிருத்தியான நாள்.
---------------------------------------

விருச்சிகம்
அக்டோபர் 03, 2021

We recommend to visit

No.1 Tamil News Daily

Last updated 3 days, 23 hours ago

🔥 முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த சேனலில் இணையவும்.

சந்தேகம் சாமிக்கண்ணு!

@TheekkathirLive

For Best Tamil Groups : @best_tamil_groups

🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗

Last updated 8 months, 2 weeks ago

🦋✨ தமிழ் கவிதை 🦋✨

We do not own any conted posted. Dm for removal.
@hokomartadmin

❤️For Best Tamil Groups :
👇👇👇👇

@TamilBestGroups

❤️ 🎗ʝσιи 🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 😍😍

Last updated 1 year, 6 months ago